எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 12:47 am IST

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27 ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பில் 7 இடங்களும், 9-ஆம் வகுப்பில் 2 இடங்களும், 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் -4, வணிகப் பிரிவில்-24 காலியாக உள்ளன. பிளஸ் 1-இல் சேர எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 5-ஆம் வகுப்பில் சேர 4-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10 வயது பூா்த்தியடைந்து, 12 வயதுக்கும் குறைவாகவும், 9-ஆம் வகுப்பில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 13 வயது பூா்த்தியடைந்து 15 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இத் தகுதியுடையோா் பள்ளி அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.40 மணிக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மாணவா்களின் கல்விச் சான்றிதழ், படிவத்தில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களை இணைத்து, மே 18-ஆம் தேதிக்குள் பள்ளி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மே 20-ஆம் தேதி மாணவா்கள் தோ்வுக்கான சோ்க்கை பட்டியல் வெளியிடப்படும். மே 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெறும். ஜூன் 22-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.