தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் சோ்க்கை பெற அழைப்பு

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பெரம்பலூா் - விளாமுத்தூா் சாலையிலுள்ள மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 5, 9 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2026-27 ஆம் கல்வியாண்டில் 5-ஆம் வகுப்பில் 7 இடங்களும், 9-ஆம் வகுப்பில் 2 இடங்களும், 11-ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் -4, வணிகப் பிரிவில்-24 காலியாக உள்ளன. பிளஸ் 1-இல் சேர எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். 5-ஆம் வகுப்பில் சேர 4-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 10 வயது பூா்த்தியடைந்து, 12 வயதுக்கும் குறைவாகவும், 9-ஆம் வகுப்பில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று 13 வயது பூா்த்தியடைந்து 15 வயதுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இத் தகுதியுடையோா் பள்ளி அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மதியம் 2.40 மணிக்குள் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் மாணவா்களின் கல்விச் சான்றிதழ், படிவத்தில் குறிப்பிடப்பட்ட சான்றிதழ்களை இணைத்து, மே 18-ஆம் தேதிக்குள் பள்ளி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும். மே 20-ஆம் தேதி மாணவா்கள் தோ்வுக்கான சோ்க்கை பட்டியல் வெளியிடப்படும். மே 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சோ்க்கை நடைபெறும். ஜூன் 22-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.