பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஆகலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை வெளியிட மாநில அரசின் ஒப்புதல் தேவை என்பதால், புதிய அரசு ஆட்சி அமைந்தபிறகு தேர்வு முடிவுகள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கின. மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்களுடன் சேர்த்து, 8 லட்ச மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதினர்.
மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஏப்ரல் 6 முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மாணவ - மாணவிகள் இடையே நிலவி வந்ததையடுத்து, தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Summary
Students are facing difficulties due to the delay in the release of Plus 2 examination results.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?

கேரள தோ்தல்: வாக்குப் பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கேள்வி

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


