சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குடிசை மாற்று வாரிய வீடுகளுக்காக காத்திருக்கும் மக்கள்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சாலை அமைக்கப்படாததால் குடிசைவாசிகள் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:38 pm

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு சாலை அமைக்கப்படாததால் குடிசைவாசிகள் காத்திருக்கும் நிலை நீடிக்கிறது.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை பகுதியில் குடிசை வீடுகள் அமைத்து அருந்ததியர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதி "ஷூமேக்கர் காலனி' என அழைக்கப்பட்டு வருகிறது. மழை காலங்களில் காலனிப் பகுதியில் வெள்ள நீர் புகுந்துவிடுவதால் மக்கள் அவதிப்படுவதும் தொடர்கதையாக இருந்தது.

இதையடுத்து இந்தப் பகுதி மக்களுக்கு நிரந்தர குடியிருப்பு கட்டித்தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மாவட்ட சிறைக்கு எதிரே உள்ள நிலத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ.2 கோடியே 64 லட்சத்தில் 84 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

சுமார் 6 மாதங்கள் கடந்தும்,அங்கு மின் இணைப்பு,மற்றும் சாலை வசதி மேற்கொள்ளப்படவில்லை.

இந்தக் குடியிருப்புப்பகுதிக்கு சாலை அமைப்பதில் இங்குள்ள வாடகை லாரி சந்தையால் நடைமுறைச்சிக்கல் உருவானது. சாலையை பாதுகாப்பான மாற்று வழியில் அமைப்பது குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 12.10.2012-ம் தேதி மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலர் கே. பணீந்தரரெட்டி, குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குநர் வி. சந்திரசேகரன் ஆகியோர் இப்பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாடகை லாரி சந்தையின் மேற்குப்பகுதியின் ஓரத்தில் உள்ள சுமார் ஒன்றரை மீட்டர் நிலத்தை அகலப்படுத்தலாம் என்றும்,அதற்காக லாரி உரிமையாளர்கள் அமைத்திருக்கும் அலுவலகங்களை சற்று தள்ளி அமைக்கலாம் எனவும் அதற்காக திட்ட அறிக்கை மற்றும் வரைபடத்தை அனுப்பி வைக்குமாறு நகராட்சி ஆணையர் மற்றும் குடிசைமாற்று வாரிய பொறியாளர்களிடமும் அறிவுறுத்திச் சென்றனர்.

சாலை அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே மின் இணைப்பு கிடைத்து தெரு விளக்குகள் அமைக்க முடியும் எனவும்,அதன் பிறகே மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள பயனாளிகள் பட்டியலில் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு வீடுகளை ஒப்படைக்கும் பணிகள் தொடங்கும் எனவும் குடிசைமாற்று வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்குமா? என்பதே அந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.