ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப் பயிற்சி

புதுக்கோட்டையில் பணியில் சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப் படை மைதானத்தில் துப்பாக்கி கையாளும் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

புதுக்கோட்டையில் பணியில் சேர்ந்த ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப் படை மைதானத்தில் துப்பாக்கி கையாளும் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
 புதுக்கோட்டையில் ஊர்க்காவல் படைக்கு 137 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10-ம் தேதி முதல் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தாமஸ்ராஜன், ஊர்க்காவல் படையினருக்கு துப்பாக்கி கையாளும் பயிற்சி அளித்தார். இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் முகாமில் தீத்தடுப்பு, யோகா, கராத்தே, முதலுதவி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com