மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மதுக்கடை அமைக்க எதிர்ப்பு  தெரிவித்து ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

News image
Updated On :16 நவம்பர் 2017, 8:30 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம் புலிவலம் ஊராட்சியைச்  சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால்,  அவ்வழியே செல்லும் மாணவிகள், பெண்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.   
எனவே, எங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். 
ஆலங்குடி தாலுகா, வடகாடு  பொதுமக்கள்:  வடகாடு பகுதியில் இருந்த மதுக்கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டது. 
ஆனால், வடகாடு பகுதியில் தனியார் கட்டடத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை நடைபெறுகிறது .  
மேலும் வடகாடு பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.