மதுக்கடை அமைக்க எதிர்ப்பு  தெரிவித்து ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம் புலிவலம் ஊராட்சியைச்  சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால்,  அவ்வழியே செல்லும் மாணவிகள், பெண்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.   
எனவே, எங்கள் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர். 
ஆலங்குடி தாலுகா, வடகாடு  பொதுமக்கள்:  வடகாடு பகுதியில் இருந்த மதுக்கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டது. 
ஆனால், வடகாடு பகுதியில் தனியார் கட்டடத்தில் 24 மணிநேரமும் மது விற்பனை நடைபெறுகிறது .  
மேலும் வடகாடு பகுதியில் மதுக்கடை திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com