விராலிமலை பெண்கள் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

விராலிமலை அரசு பெண்கள் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விராலிமலை அரசு பெண்கள் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு விராலிமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் எம். ஜான்விஸ்வநாதன் தலைமை வகித்து,  டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பரவும் முறை அவற்றின் ஆரம்ப நிலை, காய்ச்சல் வராமல் தடுக்கும் முறை, மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனை, அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறை, சுற்றுப்புற தூய்மை உள்ளிட்ட விழிப்புணர்வு பற்றி விளக்கமளித்து பேசினார்.
இதில், சித்த மருத்துவர் சித்ரா, இயற்கை நலமருத்துவர் ராஜேஸ்வரி, குழந்தை நலமருத்துவர் ஜனனி, தலைமையாசிரியர் கோ. ஜெயந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஜெ. ஆர். அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com