மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

இந்திராநகர் பகுதியினருக்கு காவிரிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணிக்கரையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு

News image
Updated On :20 அக்டோபர் 2017, 2:06 am

DIN

பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இந்திரா நகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணிக்கரையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு காவிரிநீர் குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் ச.சோலையப்பன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் திருமயம் எம்எல்ஏ எஸ்.ரகுபதிக்கு அளித்த மனுவில் கூறியுள்ளது:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 9 தொட்டிகளுக்கு காவிரி நீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.  ஆனால் இந்திராநகர் ஈஸ்வரமூர்த்தி ஊரணிக்கரையில் உள்ள 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு மட்டும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால் இப்பகுதி மக்கள் நலன்கருதி காவிரி குடிநீர் இணைப்பு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.