மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் மறியல் 

விராலிமலை அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 2:52 am

விராலிமலை அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
விராலிமலை-மணப்பாறை சாலையில் ராஜாளிப்பட்டி கிராமத்தில் 250க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கு ஆழ்துழாய் கிணறு அமைத்து இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுதவிர, 2 குடிநீர் அடிபம்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படாததால் அடி பம்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது கோடைகாலம் என்பதால் அடிபம்பிலும் தண்ணீர் கிடைக்காதது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விராலிமலை-மணப்பாறை சாலையில் காலிக் குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய விராலிமலை போலீஸார், குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.