நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

அறந்தாங்கி அருகே  வீட்டின் பூட்டை உடைத்து8 பவுன் நகை, ரூ. 6 ஆயிரம் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரு. 6 ஆயிரம் பணம், பெண்ணிடம்

Updated On :18 ஏப்ரல் 2018, 9:27 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே  திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரு. 6 ஆயிரம் பணம், பெண்ணிடம் இருந்து 8 பவுன் தங்கச் செயின் ஆகியவற்றை மர்மநபர் திருடியுள்ளார். 
அறந்தாங்கி  அருகே  காரணியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் குத்புதீன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெய்லா பீவி (45) மகன் , மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் மின்தடை ஏற்பட்டபோது, ஏதோ சப்தம் கேட்டதையடுத்து, ஜெய்லா பீவி எழுந்து வந்து பார்த்தாராம். அப்போது, கதவின் பின்புறம் மறைந்திருந்த மர்மநபர், அவர் அணிந்திருந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை  அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். அவரது அலறல் கேட்டு எழுந்து வந்த மற்றவர்கள், வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 6 ஆயிரம் ரொக்கம் திருட்டு போயிருப்பதும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
இதையடுத்து, ஜெய்லாபீவி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.