பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

தொழிலதிபரிடம் கடன் பெற்று தருவதாகக் கூறி ரூ.1.9 கோடி மோசடி: தம்பதி மீது வழக்கு

தொழிலதிபரிடம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதியப்பட்டது. 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:09 am IST

தொழிலதிபரிடம் குறைந்த வட்டிக்கு கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.1.9 கோடி மோசடி செய்ததாக தம்பதி மீது ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதியப்பட்டது. 
மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த மயில்சாமி நடராஜன் என்பவரிடம் குறைந்த வட்டிக்கு வெளியாட்களிடம் கடன் பெற்றுத் தருவதாக புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த கே.செந்தில்வேல்(44), அவரது மனைவி வெள்ளையம்மாள் ஆகியோர் கூறியுள்ளனர். 
இதனை நம்பிய மயில்சாமி நடராஜன் ரூ.1.9 கோடியை செந்தில்வேல், அவரது மனைவி வெள்ளையம்மாளிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட இருவரும் தெரிவித்தபடி கடன் பெற்றுத் தராததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸில் மயில்சாமி நடராஜன் புகார் அளித்தார். அதன்பேரில், செந்தில்வேலன், வெள்ளையம்மாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, திருச்சியைச் சேர்ந்த இரும்பு வியாபாரியிடம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த புகாரில் கடந்த வாரம் செந்தில்வேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள வெள்ளையம்மாள் தேடப்பட்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.