புதுக்கோட்டை மாவட்டக் காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த இரண்டு தலைமை காவலர்களின் வாரிசுகளுக்கு கருணை நியமனப் பிரிவின் கீழ் கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பணிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் திங்கள்கிழமை வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில் இந்த ஆணைகள் வழங்கப்பட்டன. இறந்த தலைமை காவலர்களின் வாரிசுகளான மகேஷ்வரிக்கு அத்தாணி கிராம நிர்வாக அலுவலராகவும், பிரவீன் ஜான்சனுக்கு ஒக்கூர் கிராம நிர்வாக அலுவலராகவும் பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 253 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் ஆட்சியர் கணேஷ் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. ராமசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல் பிரபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வருக்கு கீரை அனுப்பும் போராட்டம்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் கைது

மகள் கொலை வழக்கில் சிறையில் இருந்து பிணையில் வந்த தந்தை கொலை
ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


