பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னமராவதி அருகே உள்ள சேரனூர் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விராலிமலை தனி வட்டாட்சியர் லூர்துசாமி, காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக்பாட்சா, உதவியாளர் காமராசு உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது, அவ்வழியே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிப்பர் லாரியையும், கொப்பனாபட்டி சாலையில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், கூடலூர் ஆற்றுப்பகுதியில் புதுக்கோட்டை கனிமவளத் துறை தனி வருவாய் ஆய்வாளர் லட்சுமணன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் மணல் அள்ளப்பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமாவை ஏற்ற பேரவைத் தலைவா் உத்தரவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

6 எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கை: பேரவைத் தலைவரிடம் அதிமுக விளக்க கடிதம்

23.7.1976: இந்தியா - பாக். இடையே முதல் ரயில் சென்றது - 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து ஆரம்பம்






