முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

பேருந்துநிலையத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கக் கோரிக்கை

கந்தர்வகோட்டை பேருந்துநிலையத்தில் தெருவோர கடை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :26 ஜூன் 2018, 8:54 am IST

கந்தர்வகோட்டை பேருந்துநிலையத்தில் தெருவோர கடை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தெருவோர வியாபாரிகள் சங்கக் கூட்டம் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் தங்கப்பொண்ணு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எம்.என் ராமச்சந்திரன் சங்கத்தின் பணிகள் குறித்து பேசினார். கெளரவ தலைவர் எஸ்.ராசேந்திரன் கூட்டத்தை வழிநடத்தினர். சங்கத் தலைவர் ஜி.நாகராஜன் தெருவோர வியாபாரிகள் சங்கத்தின் ஒற்றுமை குறித்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  கந்தர்வகோட்டை பேருந்துநிலைய கட்டுமானப்பணியை  விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துநிலையத்தில் சுற்றுசுவர் எடுத்து அரசு பேருந்துகளுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். பேருந்துநிலையத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்,  சங்கத்தின் செயலாளர் அரசப்பன், பொருளாளர் வடிவேல், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியாக  காட்டுநாவல் கணேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.