விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விராலிமலையில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் உள்ள சன்னதி கொடி மண்டபத்தில் கொடியேற்றப்பட்டது.
பத்து நாள்கள் தொடர்ந்து நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் மயில், நாகம், சிம்மம், பூத வாகனம், வெள்ளிக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
முக்கிய நிகழ்வான வைகாசி விசாகத் தேரோட்டம் வருகிற மே 28ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் (மே 29) தெப்பத் தேர் உலா நடைபெறுகிறது. விழா நாள்களில் தினந்தோறும் மாலை வேளையில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, சொல்லரங்கம் நடைபெறும். ஏற்பாடுகளை புதுக்கோட்டை திருக்கோயில் செயல் அலுவலர் எஸ். ராமராஜா, உதவி ஆணையர் ம.ரமேஷ், ஆய்வர் மெ.லட்சுமணன், மேற்பார்வையாளர் ரெ.மாரிமுத்து உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓடிடியில் வெளியானது யூத்!

தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

