நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மாற்றுத் திறனாளிகள் சங்கக் கூட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான

Updated On :22 அக்டோபர் 2018, 3:56 am

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் தெ.லட்சுமணன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலர் எஸ்.நம்புராஜன், பொருளாளர் கே.என்.சக்கரவர்த்தி ஆகியோர் அறிக்கைகள் சமர்ப்பித்தனர். 
மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை முடக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை திருத்துவது, அரசு அலுவலகங்களில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை பணி நிரந்திரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 30ஆம் தேதி  சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது, மாற்றுத் திறனாளிகள் நலனை புறக்கணிக்கும் ரயில்வே துறையைக் கண்டித்து சென்னை உள்ளிட்ட அனைத்து ரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.