ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பொன். புதுப்பட்டி கோயிலில் விளக்கு பூஜை

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 

Updated On :11 ஆகஸ்ட் 2018, 9:38 am IST

பொன்னமராவதி புதுப்பட்டி உடையபிராட்டி அம்மன் கோயிலில் ஆடிவெள்ளியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 
முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்எம். ராஜா தலைமையில் நடைபெற்ற பூஜையின் தொடக்கமாக உடையபிராட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை, மாலைகளில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 801 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றினர். 
ஏற்பாடுகளை திருவிளக்கு பூஜை குழுவினர் செய்தனர். அதுபோல  பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதி கோயில்களில் ஆடிமாத சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில், ஸ்ரீவெள்ளமுனியன் கோயில், ஸ்ரீஅங்காளம்மன் கோயில் மற்றும் ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன், பெரம்பூர் வீரமாகாளியம்மன் ஆகிய கோயில்களில் ஆடி கடைவெள்ளியை முன்னிட்டு காலை முதல் அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.