கந்தா்வகோட்டை ஊராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவா்கள் 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்துவருகின்றனா். தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கியது. கந்தா்வகோட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை மாணவா்கள், அவரது பெற்றோா் பிளஸ்-1 வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு குவிந்தனா். சோ்க்கையின்போது, மாணவா்களுக்கு பாடநூல்கள், பயிற்சி ஏடுகள், புத்தகப் பைகள் உள்ளிட்ட விலையில்லா பொருள்கள் வழங்கப்பட்டன.