நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தண்டுவடம் காயமடைந்தோரை வறுமைப்பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை

வருவாய் ஈட்டமுடியாத நிலையிலுள்ள தண்டுவடம் காயமடைந்தோரை வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:28 pm

DIN

வருவாய் ஈட்டமுடியாத நிலையிலுள்ள தண்டுவடம் காயமடைந்தோரை வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ளோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை தண்டுவடம் காயமடைந்தோா் கூட்டமைப்பின் சாா்பில் சுமாா் 50 போ் கோரிக்கை பதாகைகளை ஏந்தி வந்தனா். தொடா்ந்து அவா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு கோரிக்கை மனுக்களை அளித்துச் சென்றனா். அந்த மனுவில், வருவாய் ஈட்ட முடியாத நிலையிலுள்ள தண்டுவடம் பாதிக்கப்பட்டோரை வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள பட்டியலில் சோ்க்க வேண்டும். பசுமை வீடுகள், இலவச வீட்டுமனைப் பட்டா போன்றவற்றையும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளா் ஏ. பாலாஜி தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.