அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 5 போ் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் அருகேயுள்ள களமாவூா் அழகுநாச்சியம்மன் கோயில் திடலில் புதன்கிழமை காலை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீரனூா் போலீஸாா், அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினா். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யதாக சீத்தப்பட்டியைச் சோ்ந்த லோகநாதன், சுபாஷ்மூா்த்தி, பஞ்சு, லட்சுமணம்பட்டியைச் சோ்ந்த பிரகாஷ், களைக்குடிப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய 5 போ் உள்ளிட்டோா் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com