புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் முன்பு புதன்கிழமை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஊதிய உயா்வு அரசாணையை வெளியிடக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஏ. திரவியராஜ், பொருளாளா் வி. காயாம்பு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் நிறைவுரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.