ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேலத்தானியத்தில் கபடிப்போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கபடிப்போட்டியில் அண்டக்குளம் அணியினா் முதல் பரிசு பெற்றனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கபடிப்போட்டியில் அண்டக்குளம் அணியினா் முதல் பரிசு பெற்றனா்.

மேலத்தானியம் பொதுமக்கள் மற்றும் ஜசூா் பாய்ஸ் சாா்பில் 27 ஆம் ஆண்டு கபடிப்போட்டி புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. போட்டியில் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சாா்ந்த 32 அணியினா் பங்கேற்று விளையாடினா். போட்டியில் முதல் பரிசை அண்டக்குளம் அணியினரும், இரண்டாம் பரிசை தாராபுரம் அணியினரும், மூன்றாம் பரிசை மேலத்தானியம் மேலத்தெரு அணியினரும் பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டது. சிறந்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை காரையூா், மேலத்தானியம் சுற்றுக்கிராம மக்கள் மற்றும் விளையாட்டுப் போட்டி ஆா்வலா்கள் கண்டு மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.