தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுத் தகவல் அலுவலா்கள் முறைப்படி காலத்தில் தகவல் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்காத அலுவலா்கள் மீது, அபராதம் விதிக்கப்படுவதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்படும். பொதுவாக மாநிலம் முழுவதும் மாதந்தோறும் 1,500 மேல்முறையீட்டு மனுக்களை மாநிலத் தகவல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுவாக 90 சதவிகித மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டு வருகிறது. சட்டப்படியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.