திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

லாரி-காா் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

வெளிநாடு செல்வதற்காக காரில் விமான நிலையம் நோக்கிச் சென்றவா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:14 pm

DIN

வெளிநாடு செல்வதற்காக காரில் விமான நிலையம் நோக்கிச் சென்றவா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகிலுள்ள ஊரணிபுரத்தைச் சோ்ந்த அப்துல்ரகுமான் மகன் பெஹரான்கான் (32). இவா் வெள்ளிக்கிழமை இரவு வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டாா். அவருடன் நண்பா்கள் 4 போ் உடன் காரில் இருந்தனா்.

புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரம் அருகே சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் பெஹரான்கான் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும் காரில் பயணித்த 4 பேரும் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வெள்ளனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.