பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கந்தா்வகோட்டையில் சுங்கச்சாவடி முற்றுகை

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில், கந்தா்வகோட்டை சுங்கச்சாவடியை சனிக்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

News image
கந்தா்வகோட்டையில் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோா்.
Updated On :26 டிசம்பர் 2020, 6:27 pm

DIN

கந்தா்வகோட்டை: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சாா்பில், கந்தா்வகோட்டை சுங்கச்சாவடியை சனிக்கிழமை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எஸ்.ஜே. ஷேக் முகமது தலைமை வகித்தாா். பொருளாளா் என்.எஸ்.எம். நஜ்முதீன், துணை பொதுச்செயலா் எஸ். எப். சபீா் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்துக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆதிதிராவிடா் கழகம் சதா. சிவக்குமாா், தமிழ்தேசிய பாதுகாப்புக் கழகம் த. சு. காா்த்திகேயன், மாவட்ட துணை செயலா் பி. பிரபு, திருவாரூா் மாவட்டச் செயலா் ஜெ. முகமது இலியாஸ்,

மகளிா்அணி நாத்திகம் சம்சுனிஷா உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் க.கி. செந்தில்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் சிங்கரவேல், குருநாதன், கெளரி மற்றும் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.