சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பொன்னமராவதியில் தமிழ்நாடு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

News image

பொன்னமராவதியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :2 நவம்பர் 2020, 8:26 pm

பொன்னமராவதியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

பொன்னமராவதி, நவ. 2: பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியச் செயலா் பி. ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அ. ராமையன் தொடக்க உரையாற்றினாா். சங்கத்தின் மாநிலப் பொருளாளா் எஸ். சங்கா் கோரிக்கைகளை விளக்கி கண்டன உரையாற்றினாா். இதில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம், கீரங்குடி கிராமத்தில் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி விற்ற சந்திரன் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும். பட்டா வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஏஎல்.பிச்சை, ஒன்றியத் தலைவா் அ.செளந்தர்ராஜன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் விஆா்எம்.சாத்தையா, சிபிஎம் ஒன்றியச் செயலா் என். பக்ரூதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.