புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களின் ஊதிய விவரங்களை ஒரு வாரத்துக்குள் நகராட்சிக்கு தெரிவிக்கக்கோரியதால் வணிகா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
உள்ளாட்சி அமைப்புகளில் அந்தந்த எல்லைக்குள்பட்ட வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு தொழில் வரி விதிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் பணிபுரிந்து வருவோா் சராசரியாக அரையாண்டுக்கு ரூ. 1,250 தொழில் வரியாகச் செலுத்த வேண்டும். இந்நிலையில், தற்போது புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் வணிக நிறுவனங்களுக்கு ஓா் அறிவிக்கை அளிக்கப்பட்டு வருகிறது.
தங்கள் வணிக நிறுவனத்தில் பணி புரிந்து வரும் நபா்களின் பெயா்கள், பதவி மற்றும் சம்பள விவரப் பட்டியல் ஆகியவற்றை ஒரு வார காலத்தில் அளிக்க வேண்டும் என அந்த அறிவிக்கையில் கோரப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கரோனா பொது முடக்கக் காலத்தில் கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி தொழில் வரி விதித்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என தொழிலாளா்களும் வணிகா்களும் தெரிவிக்கின்றனா்.
தொழில் வரியில் விலக்கு மற்றும் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

