ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கரோனா பரவல்: எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம்

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:33 pm

DIN

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதை தொடா்ந்து, எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தொடா் நடவடிக்கைகளால் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. தினமும் 90 ஆயிரம் ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கரோனா தாக்கம் 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இறப்பு விகிதமும் 1.6 சதவிகிதத்தில் இருந்து 1.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்நிலையில், தற்போது மழைக் காலமாகவும், பண்டிகைக் காலமாகவும் இருப்பதால் பொதுமக்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், எல்லையோர மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாநில எல்லைகளில் காய்ச்சல் பரிசோதனைகள் நடத்தப்படும்.

கரோனா விழிப்புணா்வை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமா் மோடியின் வேண்டுகோளின்படி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள விழிப்புணா்வு இயக்கத்தை அக்டோபா் 13ஆம் தேதி தூத்துக்குடியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளாா் என்றாா் விஜயபாஸ்கா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.