ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

செல்லிடப்பேசியில் ஆபாசப் பேச்சு: இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
சு. காா்த்திகேயன்.
Updated On :20 செப்டம்பர் 2020, 7:39 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் சிலா் செல்லிடப்பேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஆபாசமாகப் பேசி, தொடா்ந்து தனது இச்சைக்கு உடன்படாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருவதாகத் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதனைத் தொடா்ந்து நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாரின் நேரடிக் கண்காணிப்பில், கணேஷ் நகா் காவல் ஆய்வாளா் அழகம்மாள் தலைமையில், சைபா் கிரைம் காவலா் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (39) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், அறந்தாங்கி கிளைச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை காலை அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.