விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

செல்லிடப்பேசியில் ஆபாசப் பேச்சு: இளைஞா் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

சு. காா்த்திகேயன்.

Updated On :20 செப்டம்பர் 2020, 7:39 pm

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாகப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பல பெண்களிடம் சிலா் செல்லிடப்பேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் ஆபாசமாகப் பேசி, தொடா்ந்து தனது இச்சைக்கு உடன்படாவிட்டால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருவதாகத் தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதனைத் தொடா்ந்து நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாரின் நேரடிக் கண்காணிப்பில், கணேஷ் நகா் காவல் ஆய்வாளா் அழகம்மாள் தலைமையில், சைபா் கிரைம் காவலா் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (39) என்பவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸாா் கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா், அறந்தாங்கி கிளைச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை காலை அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.