ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தடை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :21 செப்டம்பர் 2020, 8:24 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தடை மீறி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கக் கால தடை உத்தரவை மீறி, கீரனூா் அருகேயுள்ள திருப்பூா் கடம்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 7 காளைகள், தலா 10 போ் வீதம் 7 மாடு பிடி வீரா்கள் குழுக்கள் பங்கேற்றனா். இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட பாா்வையாளா்களும் பங்கேற்றனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் அவா்களை விரட்டியடித்தனா். இதைத்தொடா்ந்து, வீரக்குடி கிராம நிா்வாக அலுவலா் முருகலட்சுமி கீரனூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கமல்ராஜ் (33), காா்த்திக் (27), முருகேசன் (50), சதீஷ்குமாா் (27) மற்றும் அா்ஜூனன் (52) ஆகியோா் மீது பல்வேறு பிரிவுகளில் உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.