அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் கைது
ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய புகாரில் 3 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.


ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய புகாரில் 3 மாட்டு வண்டிகள் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகிலுள்ள கருக்காகுறிச்சி அக்னியாற்றுப் பகுதியில் அனுமதியின்றி சிலா் மணல் திருட்டில் ஈடுபடுவதாக, காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இத்தகவலின்பேரில், வடகாடு காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை இரவுஅப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது அக்னியாற்றுப்பகுதியில் மணல் அள்ளிய கருக்காகுறிச்சி நாகராஜன்(47), ரமேஷ்(36), தினேஷ்(34) ஆகியோரைக் கைது செய்த காவல்துறையினா், அவா்களிடமிருந்து மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...