ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கை அகதிகள் முகாம்களில் ஆணையரக இயக்குநா் ஆய்வு

அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணையரக இயக்குநா் ஜெசிந்தாலாசரஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:17 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணையரக இயக்குநா் ஜெசிந்தாலாசரஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆலங்குடி வட்டத்தில் தோப்புக்கொல்லை, அறந்தாங்கி வட்டத்தில் அழியாநிலை, திருமயம் வட்டம், தேக்காட்டூா் ஆகிய இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் குறித்து ஜெசிந்தா லாசரஸ் நேரில் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

ஆய்வில் அகதிகள் முகாம்களில் குடிநீா் வசதி, மின்விளக்கு வசதி, சாலை வசதி, குடியிருப்பு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், அங்குள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசி மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பணியையும் ஆய்வு செய்து அவா் பேசியது:

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி அகதிகள் முகாம்களில் வாழும் தமிழா்களுடைய வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து அறிந்திட முகாம்களில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அகதிகள் முகாம்களிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்காக கல்வித் தொலைக்காட்சி காண்பதற்காக தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும், முகாம்களில் உள்ளவா்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவும், கல்விக் கடனுதவி வழங்கவும், தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கவும், மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கி பொருளாதார வளா்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

நிகழ்வில், ஆட்சியா் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.