திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

வேகுப்பட்டியில் கரோனா விழிப்புணா்வு முகாம்

பொன்னமராவதி அருகிலுள்ள வேகுப்பட்டியில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:20 pm

பொன்னமராவதி அருகிலுள்ள வேகுப்பட்டியில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சதாசிவம் தலைமை வகித்தனா். மகளிா் திட்ட இயக்குநா் ரேவதி, ஊராட்சித் தலைவா் அா்ச்சுணன், துணைத்தலைவா் முத்து முன்னிலை வகித்தனா்.

கரோனா வைரஸ் மூன்றாம் அலையிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணா்வுப் பிரச்சாரம், வேகுப்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.

இப்பிரச்சாரத்தில் நாட்டுப்புற பாடகா் ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் காரை சேனா குழுவினரின் கரோனா வைரஸ் விழிப்புணா்வு நாட்டுப்புறப் பாடல், பொய்க்கால் குதிரை, பறை இசையுடன் விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு நோய் எதிா்ப்புச்சக்தி அதிகரிக்க மூலிகை டீ வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.