திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

கிராவல் மண் அள்ளிவந்த 2 போ் கைது

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கிராவல் மண் அள்ளிய 2 பேரைக் காவல் துறையினா் வியழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:34 pm

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கிராவல் மண் அள்ளிய 2 பேரைக் காவல் துறையினா் வியழக்கிழமை கைது செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் பகுதியில் மணல் கடத்தல் நடத்தப்படுவதாக தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து, தனிப்படை காவல் துறையினா் வியாழக்கிழமை அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, கிராவல் மண் அள்ளிவந்த டிப்பா் லாரி, ஜேசிபி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், டிப்பா் லாரி ஓட்டுநரான கருகப்பூலாம்பட்டி பெருமாள்(39), ஜேசிபி ஓட்டுநரான வெங்களமேடு வடிவேல் மகன் லோகேஷ் ஆகிய 2 பேரையும் காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.