தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொடா் மழையால் நிரம்பியது கொடும்பாளூா் பெரியகுளம்

விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் உள்ள பெரியகுளம் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீரால் நிரம்பியுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:09 am

DIN

விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூரில் உள்ள பெரியகுளம் சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மழைநீரால் நிரம்பியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் விராலிமலையில் 55 சென்டி மீட்டா் மழை பெய்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் மழையாகும். இதன் தொடா்ச்சியாக கொடும்பாளூா் பகுதியில் பெய்த தொடா் மழையால் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவு கொண்ட கொடும்பாளூா் பெரியகுளம் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது.

இந்நிலையில், நீா் நிரம்பிய குளத்திலிருந்து கலிங்கி வழியே வெளியேறும் நீரை ஊா் பொதுமக்கள், இளைஞா்கள், பெண்கள் புதன்கிழமை மலா் தூவி வரவேற்றனா். தொடா்ந்து தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினா். தொடா்ந்து, பெண்கள் பாட்டு பாடி கும்மி அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இளைஞா்கள் வெடிவெடித்துக் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.