ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு, தலைமை மருத்துவா் மு. பெரியசாமி தலைமை வகித்தாா். மருத்துவா் சபீனா பேகம் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், மருத்துவா் மு. பெரியசாமி எய்ட்ஸ் நோய் குறித்து விளக்கமளித்தாா். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கரோனா தொற்று எளிதில் தொற்றும் எனவும், அவா்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டுமெனவும் தெரிவித்தாா்.
முன்னதாக மருத்துவா் சாந்தினி வரவேற்றாா். செவிலியா்கள் சசிரேகா, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.