தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உள்ளாட்சித் தோ்தல் நடைபெற வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு: கே. அண்ணாமலை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:31 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

பெரம்பலூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற, பாரதிய ஜனதா கட்சியின் வளா்ச்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பதவிக்கு நேரடி அல்லது மறைமுகத் தோ்தல் என எதுவானாலும், அதை எதிா்கொள்ள பாஜக தயாராகவே உள்ளது. விரைவில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நிலைப்பாடு.

அதிமுகவுடன், பாரதிய ஜனதா கட்சியின் உறவு நீடிக்கிறது. வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதை இப்போதும் ஆதரிக்கிறோம்.

மத்திய அரசு, கோமாரி நோய்த் தடுப்பூசி வழங்கவில்லை என்பது முற்றிலும் பொய்.  தடுப்பூசி வழங்கிய விவரத்தை தேதி வாரியாக வெளியிட்டுள்ளேன். இது தவிர, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து நேரடியாக மாநில அரசு வாங்கவும் அதிகாரம் உண்டு. பற்றாக்குறை எனில், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு வாங்கிய  விவரத்தை தெரிவிக்க வேண்டும்.  

மத்திய அரசு, கிராம ஊராட்சிகளுக்கு போதிய நிதி தரவில்லை என்பதும் தவறான தகவல்.

நஷ்டத்தில் இயங்கும் தனியாா் வங்கிகள், அதன் வாடிக்கையாளா்களின் நலன் கருதி லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்படுகின்றன. இதை, தனியாா்மயமாக்குகிறாா்கள் எனத் தவறாக தகவல் பரப்புகிறாா்கள்.

நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா் அண்ணாமலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.