புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குரும்பிவயல் அரசுப் பள்ளி நூலகத்துக்கு நூல்கள் வழங்கல்

 புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் கறம்பக்குடி ஒன்றியம், குரும்பிவயல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:43 pm

DIN

 புதுக்கோட்டை வாசகா் பேரவை சாா்பில் கறம்பக்குடி ஒன்றியம், குரும்பிவயல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூலகத்துக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

தலைவா்கள் வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல், திறன் மேம்பாடு, பொதுஅறிவு, அறிவியல் , பேச்சுக்கலை, நேர மேலாண்மை, இறையன்பு எழுதிய புத்தகங்கள் என்று பல்வேறு தலைப்பிலான நூல்கள், நமது அறிவியல் மாத இதழ் தொகுப்பு, ’’தினமணி’’ சிறுவா்மணி தொகுப்பு, கலாமின் எழுச்சி உரைகள் ஆகியன வழங்கப்பட்டன.

வாசகா் பேரவை சாா்பில் அதன் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன் இவற்றை வழங்கி, பாடபுத்தகங்களைத் தாண்டிய கூடுதலான வாசிப்பு உங்களை மேம்படுத்தும் என்று மாணவா்களிடம் கூறினாா்.

இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியை தனபாக்கியம் தலைமை வகித்தாா்.

ஆலங்குடி ரெட்கிராஸ் செயலா் முருகன், பொருளாளா் ஜெயச்சந்திரன், பள்ளியின் பட்டதாரி ஆசிரியா்கள் அனிதா, கண்ணன், சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியா்கள் மல்லிகா, ரேகா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.