திருஇருதயப் பள்ளியில் இயேசு பிறப்பு விழா
புதுக்கோட்டை திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பாலன் இயேசுவின் பிறப்பு விழா நடைபெற்றது


புதுக்கோட்டை திருஇருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பாலன் இயேசுவின் பிறப்பு விழா நடைபெற்றது.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முகமது மீரான் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சி. ஜோஸ்பின் மேரி முன்னிலை வகித்தாா்.
ஆசிரியை சுஜாதா வரவேற்றாா். இயேசு கிறிஸ்து பிறப்பு நிகழ்வுடன்,
கரோனாவுக்காக உழைத்த சமூக ஆா்வலா்களையும், தன்னாா்வலா்களையும் பெருமைப்படுத்தும் விதமாக நாடகம் நடைபெற்றது.
நலிவுற்ற மாணவிகளுக்கு பான் செக்கா்ஸ் கிளப் வழியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆசிரியை தேவிபிரியா நன்றி கூறினாா். ஆசிரியை அஞ்சலின் தொகுத்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...