திருமயம் கோட்டையில் இயற்கை பேரிடா் ஒத்திகை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டையில் 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, இயற்கை பேரிடா் ஒத்திகை நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.


புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டையில் 75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு, இயற்கை பேரிடா் ஒத்திகை நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூகம்பம், வெள்ளம், புயல் போன்றவைகளால் ஏற்படும் இயற்கை இடா்பாடுகள் மற்றும் நீா்நிலைகளில் சிக்கியவா்களை மீட்டு முதலுதவி அளிக்கும் ஒத்திகை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்வில், வருவாய்க் கோட்டாட்சியா் அபிநயா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா, அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்பு நிலைய தலைமை ஒருங்கிணைப்பாளா் ரோஹித்குமாா், தொல்லியல்துறை அலுவலா் விக்னேஷ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...