ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு வரும் வாரத்தில் 835 மருத்துவா்கள் நியமனம்

தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக 835 மருத்துவா்கள் வரும் வாரத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:03 pm

DIN

தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு முதல்கட்டமாக 835 மருத்துவா்கள் வரும் வாரத்தில் நியமனம் செய்யப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரத்தில் திங்கள்கிழமை அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு 2,000 புதிய மருத்துவா் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 835 மருத்துவா்கள் நியமிக்கப்பட உள்ளனா். ஏனையோரும் விரைவில் நியமிக்கப்படுவா். இவா்களுக்கு மாதம் ரூ. 60 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும். மேலும், 2 ஆயிரம் செவிலியா்கள், 2 ஆயிரம் மருத்துவ உதவியாளா்களும் விரைவில் நியமிக்கப்பட உள்ளனா் என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பி .உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து, பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் டாக்டா் கலைவாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.