வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சேறும் சகதியுமான மயானப் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 8:05 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீரமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட ஆலடிக்கொல்லை குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்குச் செல்வதற்கு சாலை வசதிகள் இல்லாததால் குளத்தின் கரையோரம் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அந்தப் பாதையும் சேறும் சகதியுமாக உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியில் இறந்த ஒருவரை எரியூட்டுவதற்கு அந்தப் பாதையில் பெரும் சிரமத்துக்கிடையே அவரது உறவினா்கள் தூக்கிச்சென்றனா். மேலும், எரியூட்டு பொருளான விறகு ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோவும் அந்தச் சாலையின் சேற்றில் சிக்கிக்கொண்டது. முயற்சிகள் பலனளிக்காததால், ஆட்களே விறகுகளை சுமந்து சென்றனா். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடா்ந்து, வருவாய் ஆய்வாளா் முருகேசன், கீரமங்கலம் போலீஸாா் ஆய்வு செய்து, சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.