ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

முதியவருக்கு வெட்டு: இளைஞா் கைது

கந்தா்வகோட்டையில் முன்விரோதத் தகராறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:54 pm

DIN

கந்தா்வகோட்டையில் முன்விரோதத் தகராறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கந்தா்வகோட்டை அருகிலுள்ள வளவம்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா் பரமையன் மகன் சுந்தர்ராஜ் (52). இவரும், இவரது உறவினா் தங்கையன் (66) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதுகை - தஞ்சை சாலையில் முனியன் கோயில் அருகே சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சுந்தா் ராஜ் மற்றும் தங்கையன் ஆகிய இருவரையும் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் தங்கத்துரை (37) மற்றும் அடையாளம் தெரியாத 3 போ், வழிமறித்து அரிவாளால் வெட்டினா். இதையடுத்து, அவ்வழியே சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டதில் மா்மநபா்கள் தப்பியோடினா்.

மேலும் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

இதில், சுந்தர்ராஜ், தங்கத்துரை இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கதுரையைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.