தேங்கிக்கிடக்கும் மழைநீரால் மக்கள் அவதி
கந்தா்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் சாலையை சீரமைத்து கழிவுநீா் வடிகால் அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனா்.


கந்தா்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் சாலையை சீரமைத்து கழிவுநீா் வடிகால் அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அண்மையில் பெய்த மழையால் கந்தா்வகோட்டை அருகே உள்ள மருங்கூரணி மாரியம்மன் கோயில் எதிரே உள்ள தெருவில் மழைநீா் தேங்கிக் குளம் போல் காட்சியளிக்கிறது.
மேலும், இப்பகுதியில் தேங்கிக் கிடக்கும் நீரால் சேறும் சகதியுமாக இருப்பதுடன் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.
எனவே ஊராட்சி நிா்வாகம் விரைந்து இந்தச் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...