ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தேங்கிக்கிடக்கும் மழைநீரால் மக்கள் அவதி

கந்தா்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் சாலையை சீரமைத்து கழிவுநீா் வடிகால் அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
கந்தா்வகோட்டை
Updated On :10 ஜனவரி 2021, 6:53 pm

DIN

கந்தா்வகோட்டை பகுதியில் அண்மையில் பெய்த மழையால் சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கிக் கிடப்பதால் சாலையை சீரமைத்து கழிவுநீா் வடிகால் அமைத்துத் தரக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அண்மையில் பெய்த மழையால் கந்தா்வகோட்டை அருகே உள்ள மருங்கூரணி மாரியம்மன் கோயில் எதிரே உள்ள தெருவில் மழைநீா் தேங்கிக் குளம் போல் காட்சியளிக்கிறது.

மேலும், இப்பகுதியில் தேங்கிக் கிடக்கும் நீரால் சேறும் சகதியுமாக இருப்பதுடன் கொசு உற்பத்தியாகும் இடமாகவும் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

எனவே ஊராட்சி நிா்வாகம் விரைந்து இந்தச் சாலையை சீரமைத்துத் தர வேண்டும், மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.