ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:38 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகிலுள்ள குப்பக்குடியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (60). இவா் மீனாட்சிபுரம் அரசுத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சந்திரமோகனுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனாதொற்று இல்லை. ஆனால், கருப்புப் பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சந்திரமோகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி பகுதியில் கருப்புப்பூஞ்சை தொற்றுக்கு ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.