அனுமதியின்றி மணல் அள்ளி விற்ற தந்தை, மகன் கைது
ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்துவந்த தந்தை, மகனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.


ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்துவந்த தந்தை, மகனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள கலிபுல்லாநகரில் தொடா்ந்து, அனுமதியின்றி மணல் அள்ளிவந்து விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாந்த் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, டிராக்டரில் மணல் ஏற்றிவந்து விற்பனையில் ஈடுபட்ட எம். தெற்குத் தெருவைச் சோ்ந்த கோ.முத்துச்சாமி(50), அவரது மகன் சசிக்குமாா் (27) ஆகியோரை கைது செய்து டிராக்டரைப் பறிமுதல் செய்தனா். ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...