ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அனுமதியின்றி மணல் அள்ளி விற்ற தந்தை, மகன் கைது

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்துவந்த தந்தை, மகனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 7:36 pm

DIN

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்துவந்த தந்தை, மகனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கலிபுல்லாநகரில் தொடா்ந்து, அனுமதியின்றி மணல் அள்ளிவந்து விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாந்த் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, டிராக்டரில் மணல் ஏற்றிவந்து விற்பனையில் ஈடுபட்ட எம். தெற்குத் தெருவைச் சோ்ந்த கோ.முத்துச்சாமி(50), அவரது மகன் சசிக்குமாா் (27) ஆகியோரை கைது செய்து டிராக்டரைப் பறிமுதல் செய்தனா். ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.