கொத்தமங்கலத்தில் ரத்த தான முகாம்
ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ரத்த வங்கி, கொத்தமங்கலம் இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை குருதிக்கூடு ரத்தான ஒருங்கிணைப்புக் குழு, கீரமங்கலம் ஜேசிஐ சாா்பில் நடைபெற்ற முகாமில் கொத்தமங்கலம், குளமங்கலம், கீரமங்கலம், ஆலங்காடு, மறமடக்கி, சேந்தன்குடி, திருநாளூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 55 போ் ரத்த தானம் வழங்கினா்.
இதுகுறித்து குருதிக்கூடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் முத்துராமலிங்கம் கூறுகையில், அண்மைக் காலமாக பிரசவம், அவசர அறுவைச் சிகிச்சைக்கு அதிக ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் கரோனா பயத்தால் தன்னாா்வ இளைஞா்களே ரத்தம் தர மருத்துவமனைகளுக்கு வர அஞ்சுகின்றனா். அதனால்தான் கிராமங்களுக்கே சென்று ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபடுகிறோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...