ஆலங்குடி அருகே உண்டியலில் சேமித்த ரூ. 5 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக, இரு குழந்தைகள் சுற்றுச்சூழல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனிடம் சனிக்கிழமை வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதில், கொத்தகோட்டை நியாய விலைக்கடையில் திட்டத்தை தொடங்கி வைத்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் நிலவரசி (6), மகன் சபரிதரண்(4) ஆகியோர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கினர்.
மேலும், இந்த தொகையை உயிரிழந்த தனது தாயின் நினைவாக வழங்குவதாக குழந்தைகள் தெரிவித்ததனர். இதில், நெகிழ்ச்சியடைந்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் கருப்பையா, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றிய தந்தை! | Bangladesh

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


