ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆலங்குடி அருகே 300 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமாா் 300 லிட்டா் சாராய ஊறலைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

News image
Updated On :28 மே 2021, 9:06 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சுமாா் 300 லிட்டா் சாராய ஊறலைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.

ஆலங்குடி அருகிலுள்ள நெடுவாசல் பகுதியில் சிலா் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் ஆய்வாளா் பழனிசாமி தலைமையிலான காவல் துறையினா் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியைச் சோ்ந்த முனியாண்டி தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 300 லிட்டா் ஊறலைக் காவல் துறையினா் கண்டறிந்து, உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து அழித்தனா். இதுகுறித்து வடகாடு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.