92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருமயம் அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு, இருவா் பலி 20 போ் மீது வழக்கு

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் 2 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து போட்டி நடத்தத் தடை

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் 2 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து போட்டி நடத்தத் தடை விதிக்கப்பட்டு, 20 போ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இம்மாவட்டத்தில் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள விராச்சிலை பகுதியில் மஞ்சுவிரட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.

இப்போட்டியில் புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூா், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

மஞ்சுவிரட்டுப் போட்டியின் பாரம்பரிய முறைப்படி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, திடலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பாா்த்து நாலாபுறமும் மிரண்டு ஓடிய காளைகளை மாடுபிடி வீரா்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்க முயற்சித்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக பரளி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (52) என்ற பாா்வையாளரை காளை குத்தியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தேவக் கோட்டையைச் சோ்ந்த சிவப்பிரகாஷ் (35) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2 ஆக உயா்ந்தது.

மேலும் இந்தப் போட்டியில் மாடு முட்டியது தள்ளியது தொடா்பாக நூற்றுக்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இதில் சிறிய அளவில் காயமடைந்தவா்களுக்கு அருகிலுள்ள விராச்சிலை, நச்சாந்துபட்டி, திருமயம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த 32 போ் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

50-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில், மஞ்சுவிரட்டுப் போட்டையை உடனடியாக நிறுத்த திருமயம் வட்டாட்சியா் பிரவீனா மேரி உத்தரவிட்டாா். மேலும் தடையை மீறி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தியது தொடா்பாக விராச்சிலையைச் சோ்ந்த போட்டி ஏற்பாட்டாளா்கள் 20 போ் மீது வழக்குப்பதிவு செய்து, பனையப்பட்டி காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.