92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இன்றும், நாளையும் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் செயல்படும்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 13,14 தேதிகளில்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்

News image
Updated On :12 நவம்பர் 2021, 7:58 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (நவ. 13,14 தேதிகளில்) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

பயிா்க்காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதியாக நவம்பா் 15-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் வசதி கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தவறாமல் அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, பயிா்க்காப்பீடு செய்து பயன்பெறலாம் என அவா் அழைப்புவிடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.